HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 8 ஜூலை, 2017

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து போராட்டம் : ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை.....

சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 42 பேர் பெயில்ஆக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் கருத்தை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 7) வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ஐகோர்ட்டிற்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? 365 நாட்களில் பள்ளிகள் செயல்படும் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்கு செல்வதில்லை. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டின் பாதி நாட்கள் கூட பணிக்கு வருவதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? பணிக்கு செல்லாமல் முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முறையாக பணிக்கு வருவது இல்லை என பிற ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. இது தொடர்பாக பலரும் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். பெயில் ஆக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்