HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 7 ஏப்ரல், 2017


பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற  21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்


தமிழகத்தில் ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும்,   2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைந்தது.

பிளஸ்-மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.

பிளஸ்-மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல்  9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று  வருகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலைப்பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது. 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசு தொடக்கப்பள்ளிகள்அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு 
தேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது. இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.

கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும். 
எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமாஎன்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-வகுப்புகள் அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன் 15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியும்பிளஸ்-வகுப்பு தொடங்கும் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.