HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 4 மார்ச், 2017

மாணவர்களுக்கு பரிசு:முதல்வர் பழனிசாமி வழங்கினார்

கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத் தேர்வில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற, மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பழனி சாமி பரிசுத் தொகை வழங்கினார்.அரசு பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
2015 - 16ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதலிடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடம் பெற்ற, 21 மாணவர்களுக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற , 22 பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 69 மாணவ - மாணவியருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற, 424 மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மாணவ - மாணவியருக்கு, 1.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் வழங்குவர்.