HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 1 மார்ச், 2017

உதவித்தொகை பெறுவதில்... சிக்கல்! பள்ளி குழந்தைகள் அவதி!!!

உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு, வங்கிகளில் கணக்கு துவக்க முடியாததால், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கரட்டூர், அமராவதிநகர், லிங்கமாவூர், திருமூர்த்திநகர் உள்ளிட்ட நான்கு மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் ஓரு உண்டு உறைவிடப்பள்ளியும்
செயல்படுகிறது. கோடந்தூர், குழிப்பட்டி, குறுமலை, தளிஞ்சி, கரட்டுபதி உட்பட சுற்றுப்பகுதி மலைகிராமங்களிலுள்ள குழந்தைகள் மட்டுமின்றி, மூணார், வால்பாறை உட்பட தொலைதூரபகுதிகளிலிருந்தும் இப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கான தங்கும் வசதியோடு, கல்வியும் வழங்குவதற்காக உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர் இல்லாத அல்லது குடும்ப சூழல் சரியில்லாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளும் இப்பள்ளிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் குழந்தைகளுக்கான சீருடை உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் பராமரிப்புக்கென, சோப்பு, எண்ணெய் போன்ற செலவுகளுக்கு, மாதம், 50 ரூபாய் அரசின் சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை, உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
ஆனால், இரண்டாண்டுகளாக, அப்பள்ளி குழந்தைகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த உதவித்தொகையை பெறுவதில், பல குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் வழங்கப்படுவதால், குழந்தைகளுக்கான தனித்தனி கணக்குகள் துவக்கப்பட வேண்டும். கணக்கு துவக்குவதற்கு, அவர்களுக்கான முகவரி அடையாள அட்டை அவசியமாக உள்ளது. இதில், பல குழந்தைகள் ஆதரவில்லாத நிலையில் இருந்து பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், முகவரிக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.
வங்கிகளில், பள்ளியின் முகவரியைக்கொண்டும் கணக்கு துவங்க முடிவதில்லை. வங்கிகளின் மூலம் மட்டுமே உதவித்தொகை செலுத்தப்படுவதால் அந்த குழந்தைகளுக்கான, உதவித்தொகை கடந்த இரண்டாண்டுகளாகவே கிடைப்பதில்லை.
நலத்துறை நடவடிக்கை அவசியம்
இப்பிரச்னை கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்தும், ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால், அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை அக்குழந்தைகளை சென்றடைவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு பள்ளியின் முகவரியைக்கொண்டு, வங்கி கணக்குகள் துவங்குவதோடு, உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.