HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 5 மார்ச், 2017

பெண்கள் கட்டுபாட்டில் இயங்கிய விமானம்!

இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக பெண் ஊழியர்களால் பயணிகள் விமானம் இயக்கப்பட்டுள்ளது. உலகை சுற்றிய இந்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி வந்தடைந்தது.

வரும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தில் உலக சாதனைக்காக ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் பெண் ஊழியர்களை வைத்து விமானத்தை இயக்குவதற்கு திட்டமிட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. பசிஃபிக் பெருங்கடல் மீது பயணித்து, திரும்பி வரும்போது அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகையே சுற்றி மீண்டும் டெல்லி வந்தடைந்தது.

இந்த பயணத்தின்போது, பயணச்சீட்டை சரிபார்க்கும் பணியாளார்கள், விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு பணியாளார்கள், விமானம் புறப்படுவதற்குமுன் அதற்கு சான்றிதழ் அளிக்கும் பொறியாளர்கள் மற்றும் விமானம் புறப்படவும், தரையிறங்கவும் அனுமதியளிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் என அனைவருமே பெண்கள் தான். அவர்கள் கட்டுபாட்டில் சிறப்பாக இந்த விமானம் உலகை சுற்றி வந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த சாதனைக்காக கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தக நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நிறுவனமான ஏர் இந்தியா ஜனவரி 18 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.