HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 5 மார்ச், 2017

கட்டணமில்லாமல் 10 முறை பணம் எடுக்கலாம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ....!!

ஏடிஎம்மில் 10 முறை இலவசமாக பணமெடுக்கலாம்
ரூபாய் நோட்டு பண மதிப்பு இழப்பிற்கு பிறகு, நாட்டில் பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது . மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டது. அந்த வேளையில் புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட 2,௦௦௦ ரூபாய் மற்றும் பழைய 1௦௦ ரூபாய் தாள்களை ஏ டி எம்மில் இருந்து
எடுப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதிய சம்பவம் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து, ஏ டி எம் இலிருந்து எத்தனை முறை வேண்டுமாளாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது அதாவது பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது . இந்த நடைமுறை தற்போது மாறி , பல தனியார் வங்கிகள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப் படும் என தெரிவித்து இருந்தது.
அதன்படி, ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியானது, ஏடிஎம்.,களில், மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது
இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் சேவிங் வங்கி கணக்கில் குறைந்தபட்ச கையிருப்பாக 5௦௦௦ ரூபாய் வரை , வாடிக்கையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என எஸ் பி ஐ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கட்டணமில்லாமல் மாதத்திற்கு 10 முறை ஏடிஎம் மில்லிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.