HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மே14க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும்படியும்உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என, நீதிபதிகள்கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.
உத்தரவு:
இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.