HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 9 ஜனவரி, 2017

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, திருவண்ணாமலையில் நடை பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நக ராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து அரசு ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நேற்று மாலை நடை பெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டு திடலை வந்தடைந்தது. பின்னர் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை யில் மாநாடு நடைபெற்றது.
அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தலைவர் முத்துசுந்தரம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், "20 சதவீத இடைக் கால நிவாரணம் வழங்க வேண் டும், ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும், சிறப்பு ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறுபவர் களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவது, மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நடத்துவது, ஏப்ரல் 25-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சீதரன், பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.