HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 27 நவம்பர், 2016

சிறைச்சாலை மனநல ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்துக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: சமூகவியல், உளவியல், சமூகப் பணி மாஸ்டர் பட்டம், மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவையில் மனநல ஆலோசகர் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: (அதிகபட்சமாக) எஸ்.சி. 40, எஸ்.டி. 40, பிற்படுத்தப்பட்டோர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 35, இதர பிரிவினர் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை பிரிவு) புழல், சென்னை-66 என்ற முகவரியில் சேர்க்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04426590615 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.