HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 30 நவம்பர், 2016

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரீசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பேராயர் ராஜவேலு, அப்போதைய கல்லூரி நிதியாளுநரும், தற்போதைய பொறுப்பு முதல்வரான எழில்கிறிஸ்துதாஸ் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கல்லூரி நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராயர் ராஜவேலுவை, கல்லூரிச் செயலர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து, நிர்வாகக் குழுவைக் கூட்டி மாற்றுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, பொறுப்பு முதல்வர் எழில்கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவரை புதன்கிழமை (நவ.30) பணி ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது. மேலும் வழக்கு முடிவடையும் வரையில் அவருக்குச் சேர வேண்டிய பணி பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பில் இருந்து எழில்கிறிஸ்துதாஸ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவு குறித்து பேராயர் ராஜவேலுவின் கருத்தை அறிய தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.