HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 12 நவம்பர், 2016

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
 டில்லியில், நேற்று முன்தினம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறைஅமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடுநடைபெற்றது.

பெரும்பான்மை மாநில அரசு பிரதிநிதிகள்பங்கேற்ற இந்த மாநாட்டில், இளைஞர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கான தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை, ராஜீவ்பிரதாப் ரூடி அறிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தின் கீழ்,அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்மாணவர்களுக்கு, தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்விமையங்களில், இந்த பயிற்சி திட்டம்செயல்படுத்தப்படும். இதற்காக,என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ.,பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர்பயிற்சியை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில்இளைஞர்களுக்கு, மேலும் அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2,200 கல்லுாரிகள்,பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்தியதொழிற்கல்வி மையங்கள், 50தொழில்முனைவோர் மேம்பாட்டுமையங்கள் ஆகியவற்றின்மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாகதொழில் முனைவோர் பயிற்சிவழங்கப்படும்.
அத்துடன், தொழில் விபரங்கள், தொழில்முன்னோடிகளின் ஆலோசனைகள் உட்பட,தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம்.தேசிய மற்றும் சர்வதேச தரத்திலானதொழில் முனைவோர் கல்விப் பயிற்சி,இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர்திறன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அரசுகளுக்குஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும்திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்,ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சிசாதனங்களின் தரம் உள்ளிட்டவைதொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள்,
தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியஅரசின் திட்டங்கள், அதகளவில், முதல்தலைமுறை தொழில் முனைவோரைஉருவாக்க உதவும். இவ்வாறு  அவர்கூறினார்.
முதல் தலைமுறையினர்:
சிறப்பாக செயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட,முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள்வழங்கப்படும் என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.